#தமிழனுக்கு ஒரு கடிதம்
#மிகலி
தமிழரிடையே உள்ள பகை பிரிவுகளை மேலும் வளர்க்கும் செயல்களை செய்யாதே ;
அத்தகைய சொர்களை சொல்லாதே ; அவ்வாறான எண்ணங்களை எண்ணாதே தமிழருடைய ஒற்றுமை வளர்க்கும் சிந்தை சொல் செய்யல்களையே போற்று. சுவையாக இருந்தாலும் முன்னவை நாடாதே. சுவை அற்றுஇருந்திலும் பின்னவை போற்று.
கொள்கைகளும் கட்சிகளும் இயக்கங்களும் நாட்டு மக்களின் நம்மைக்காகத் தோன்றியவை. ஆகவே கொள்கைகள் கட்சிகள் இயக்கங்களை விட நாட்டுமக்களின் நன்மையே பெரிது என்று உணர்.
தமிழ்நாடு உயரவேண்டும் என்றால் இங்குள்ள மலையும் காடும் நிலமும் நீரும் உயர்தல் அல்ல. இங்கு வாழும் மக்கள் யாவரும் உயர்தல் என்று கருது. ஆகவே, இந்நாட்டில் உள்ள வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், பிச்சை எடுத்தல் முதலிய கொடுமைகள் ஒழிய வேண்டும் என்று கருது. ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இல்லை என்று பாரதியார் கண்ட கனவை போற்று. வரியவர்கைகளைக் காணும் போதெல்லாம் இதை நினை. நீ உணவு உண்ணும் முன்பு ஒரு நொடிப்பொழுதில் கண்ணை மூடி, இலையில் உள்ள உணவு ஏழைத் தொழிலைகளிடம் உழைப்பால் ஆனது என்று எண்ணு. வாரத்திரற்கு ஒரு நாளெனும் நீ வாழும் வீடு ஏழைத்தொழிலகளின் உழைப்பால் ஆனது என்று எண்ணு. நீ உடுக்கும் உடை முதலினும் ஏழைத்தொழிலைகளின் உழைப்பால் ஆனது என எண்ணு. அந்த ஏழை குடும்பங்களில் பிறந்தவர்கள் உன்னைப் போல உண்ண முடியவில்லை என்பதையும், உன்னைப் போல் கல்வி கற்க முடியவில்லை என்பதையும் என்னு. அவர்கள் உயர வேண்டும் என்று கசிந்திருகு. இன்றைய எண்ணமே வருங்கால அமைப்புக்கு வித்து. ஆகையால் உண்ணுவதால் பயனுண்டு என்று நம்பிக்கையோடு எண்ணு
*so long as the millions live in hunger and ignorance,I hold every man a traitor who,having been educated at their expense,pays not the least heed to them.*விவேகானந்தரின் இந்தமணிமொழியை மறவாதே.
"யாதும் ஊரே யாவரும் கேளீர்"என்ற நல்ல நிலை வரவேண்டும்,உலகம் ஒரு குடும்பமாக வாழ வேண்டும் என்று ஆர்வம் கொள். அந்த நிலை வந்தால்,நாட்டுப்பற்று என்பது வேண்டாததாகிவிடும் என்றும் அறிந்துக்கொள். அதுவரையில் நம் நாட்டுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது என்பதை மறவாதே.ஊருக்கெல்லாம் போதுக்காவல் சிறந்த முறையில் ஏற்படும் வரையில் ஒவ்வொருவரும் தம்தம் வீட்டைத் தாளிட்டு காத்துக்கொள்ள வேண்டும் அல்லவா?அதுபோல உலகத்திற்கு பொதுவான ஒரு சிறந்த ஆட்சி முறை ஏற்படும் வரையில் நம் நாட்டை நாம் தவறாமல் காத்துக்கொள்ள வேண்டும். அது குறுகிய நோக்கம் அல்ல. இன்றி அமையாத கடமை என்று உணர்ந்துக் கொள்.
உன் மானத்தை விட நாட்டின் மானம் பெரிது என்று உணர். உன் உயர்வை விட நாட்டின் உயர்வு இன்றியமையாதது என்று உணர். உன் நலத்தை விட நாட்டின் நலம் சிறந்தது என்று உணர். நெருக்கடி நேரும் போது உன் நலம் உயர்வு மானம் ஆகியவற்றை நாட்டிற்காக விட்டுக்கொடு.
தலைமை உன்னை தேடிக் கொண்டு வந்தால் வரட்டும்; நீ அதை தேடிக்கொண்டு போய் அலையாதே. நீ தேட வேண்டியது தொண்டு. தலைமை தாக்குவதும் ஒரு வகை தொண்டு தான். தன்னலம் அற்றவற்கு அது பொறுப்பும் சிக்கலும் மிகுந்த தொண்டு. அத்தகைய தலைமை பொறுப்பு எப்போதாவது உன்னை நாடி வந்தால் ஏற்றுக்கொள். ஆனால் தொண்டுக்கு முந்தி தலைமைக்கு பிந்தி என்பது உன் நெறியாக இருக்கட்டும்.
#மிகலி
தமிழரிடையே உள்ள பகை பிரிவுகளை மேலும் வளர்க்கும் செயல்களை செய்யாதே ;
அத்தகைய சொர்களை சொல்லாதே ; அவ்வாறான எண்ணங்களை எண்ணாதே தமிழருடைய ஒற்றுமை வளர்க்கும் சிந்தை சொல் செய்யல்களையே போற்று. சுவையாக இருந்தாலும் முன்னவை நாடாதே. சுவை அற்றுஇருந்திலும் பின்னவை போற்று.
கொள்கைகளும் கட்சிகளும் இயக்கங்களும் நாட்டு மக்களின் நம்மைக்காகத் தோன்றியவை. ஆகவே கொள்கைகள் கட்சிகள் இயக்கங்களை விட நாட்டுமக்களின் நன்மையே பெரிது என்று உணர்.
தமிழ்நாடு உயரவேண்டும் என்றால் இங்குள்ள மலையும் காடும் நிலமும் நீரும் உயர்தல் அல்ல. இங்கு வாழும் மக்கள் யாவரும் உயர்தல் என்று கருது. ஆகவே, இந்நாட்டில் உள்ள வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், பிச்சை எடுத்தல் முதலிய கொடுமைகள் ஒழிய வேண்டும் என்று கருது. ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இல்லை என்று பாரதியார் கண்ட கனவை போற்று. வரியவர்கைகளைக் காணும் போதெல்லாம் இதை நினை. நீ உணவு உண்ணும் முன்பு ஒரு நொடிப்பொழுதில் கண்ணை மூடி, இலையில் உள்ள உணவு ஏழைத் தொழிலைகளிடம் உழைப்பால் ஆனது என்று எண்ணு. வாரத்திரற்கு ஒரு நாளெனும் நீ வாழும் வீடு ஏழைத்தொழிலகளின் உழைப்பால் ஆனது என்று எண்ணு. நீ உடுக்கும் உடை முதலினும் ஏழைத்தொழிலைகளின் உழைப்பால் ஆனது என எண்ணு. அந்த ஏழை குடும்பங்களில் பிறந்தவர்கள் உன்னைப் போல உண்ண முடியவில்லை என்பதையும், உன்னைப் போல் கல்வி கற்க முடியவில்லை என்பதையும் என்னு. அவர்கள் உயர வேண்டும் என்று கசிந்திருகு. இன்றைய எண்ணமே வருங்கால அமைப்புக்கு வித்து. ஆகையால் உண்ணுவதால் பயனுண்டு என்று நம்பிக்கையோடு எண்ணு
*so long as the millions live in hunger and ignorance,I hold every man a traitor who,having been educated at their expense,pays not the least heed to them.*விவேகானந்தரின் இந்தமணிமொழியை மறவாதே.
"யாதும் ஊரே யாவரும் கேளீர்"என்ற நல்ல நிலை வரவேண்டும்,உலகம் ஒரு குடும்பமாக வாழ வேண்டும் என்று ஆர்வம் கொள். அந்த நிலை வந்தால்,நாட்டுப்பற்று என்பது வேண்டாததாகிவிடும் என்றும் அறிந்துக்கொள். அதுவரையில் நம் நாட்டுக்கு நாம் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது என்பதை மறவாதே.ஊருக்கெல்லாம் போதுக்காவல் சிறந்த முறையில் ஏற்படும் வரையில் ஒவ்வொருவரும் தம்தம் வீட்டைத் தாளிட்டு காத்துக்கொள்ள வேண்டும் அல்லவா?அதுபோல உலகத்திற்கு பொதுவான ஒரு சிறந்த ஆட்சி முறை ஏற்படும் வரையில் நம் நாட்டை நாம் தவறாமல் காத்துக்கொள்ள வேண்டும். அது குறுகிய நோக்கம் அல்ல. இன்றி அமையாத கடமை என்று உணர்ந்துக் கொள்.
உன் மானத்தை விட நாட்டின் மானம் பெரிது என்று உணர். உன் உயர்வை விட நாட்டின் உயர்வு இன்றியமையாதது என்று உணர். உன் நலத்தை விட நாட்டின் நலம் சிறந்தது என்று உணர். நெருக்கடி நேரும் போது உன் நலம் உயர்வு மானம் ஆகியவற்றை நாட்டிற்காக விட்டுக்கொடு.
தலைமை உன்னை தேடிக் கொண்டு வந்தால் வரட்டும்; நீ அதை தேடிக்கொண்டு போய் அலையாதே. நீ தேட வேண்டியது தொண்டு. தலைமை தாக்குவதும் ஒரு வகை தொண்டு தான். தன்னலம் அற்றவற்கு அது பொறுப்பும் சிக்கலும் மிகுந்த தொண்டு. அத்தகைய தலைமை பொறுப்பு எப்போதாவது உன்னை நாடி வந்தால் ஏற்றுக்கொள். ஆனால் தொண்டுக்கு முந்தி தலைமைக்கு பிந்தி என்பது உன் நெறியாக இருக்கட்டும்.