Saturday, 11 August 2018

#தலையங்கம்

இந்திய மருத்துவச் சந்தை(3)

கழுத

மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பு:
            பல உயிர்களை உருக்கிக்கொண்டிருக்கும் புற்றுநோய்களை தினம்தோறும் அறுவடை செய்யும் sterlite போன்ற தொழிற்சாலைகளுக்கு கிடைக்கும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர்,உயிர் காக்கும் மருத்துவத்துறைக்கு ஏன் கிடைக்கவில்லை.
அடிப்படைத் தேவையான விவசாயத்திற்கு தண்ணீர் இல்லையெனும்போது நாம் கவலை கொள்ளத் தேவையில்லை.இது தொடருமெனில் பரங்கியனின் பேப்பர் பழக்கத்துக்கு நாம் அடிமை ஆகும் நாள் வெகு தொலைவிலில்லை.
தவறுகளை அரசாங்கத்தின் மீதும் வைத்துக்கொண்டு மருத்துவர்களை மட்டும் வாதம் செய்வது நியாயமாகாது.
உள் நோயாளிகளின் நிலையோ,இதனினும் கொடுமை.பிணி வந்தோருக்கு படுக்கை கூட பாரபட்சமே,முன்வந்தோர்க்கே முன்னுரிமை.அசுத்தத்தாலும் ஆரோக்கியமின்மையாலும் னாய் வந்தோருக்கு,மருத்துவமனைகளில் கூட சுகாதாரத்தை அனுபவிக்க வழியில்லை.அத்தியாவசியங்கள் எல்லாம் அசாத்தியமாகிவிட்டன இந்த பணக்கார நாட்டில்.
பணக்காரர்களின் நோயாக அறியப்பட்ட சர்க்கரை,இன்று ஏழைகளை மட்டுமே வாட்டி வதைப்பது,"என்ன தவம் செய்தனை யசோதா" என்று 3பெருமையாய் உறுமிக்கொள்வதா,இல்லை,"என்ன கொடும சரவணா"என தலையில் அடித்துக்கொள்வதா தெரியவில்லை.
"வேளாண்மைக்கான விதைப்பயிர்களிலோ தட்டுப்பாடு,ஆனால்
நோய்களுக்கான விதைநுண்ணுயிரிகளிலோ மிச்சப்பாடு"
புகையிலை இழுத்தவனக்கு புற்றுநோய் என்பது மாறி,புகையை விளையாட்டுப் பொருளாய் பார்க்கும் குழந்தைக்கும் வந்துவிட்டது.
விடையில்லா வினாக்கள் போல் மருந்தில்லா நோய்களும் இவ்வுலகை விட்டு நீங்கிப் போக வாய்ப்பிள்ளையோ?

No comments:

Post a Comment

தலையங்கம்

#309 #வினோதினி #மார்பகப் புற்றுநோய் மார்பகப் புற்றுநோய் எப்பொழுதும்போல் அவசர அவசரமாக கிளம்பி 7.30 மணிக்கெல்லாம் அறுவை சிகிச்சைத் துறைய...