#இந்திய மருத்துவச் சந்தை
#கழுத
இந்திய மருத்துவச் சந்தை
நோய் வருவதற்கான முக்கியமான காரணிகள் இரண்டு
ஒன்று:அடிப்படைச் சுற்றுபுரச் சூழல்
மற்றோன்று:மருத்துவக் கட்டமைப்பு அடிப்படைச் சூழலை முழுவதுமாக மாற்றிவிட்டோம்;நம் நாடா என்ற நிலைக்கு தள்ளிவிட்டோம்.மருத்துவக் கட்டமைப்போ "இருக்கு ஆனா இல்ல"என்பது போன்ற நிலை தான்.சில இடங்களில் கட்டடங்கள் உள்ளன,அனால் மருத்துவர்கள் இல்லை.சிலவற்றிலோ மருத்துவர்கள் உள்ளனர்,கட்டடங்கள் இல்லை.
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து 479 மருத்துவக் கல்லூரிகளைக் கட்டியுள்ளோம்-130 கோடி மக்களுக்கு.இளையர்கள் அதிகம் உள்ள நாடு என்று பெருமை பேசிக்கொண்டு திரிகிறோமே.அடுத்த 20 ஆண்டுகளில் முதியோர்களை அதிகம் கொண்ட நாடாக பரிணமிக்க போகிறோம்.அப்போது,52 லட்சம் மருத்துவர்களும் ,1000 நோயாளிகளுக்கு 4 மருத்துவர்களும் தேவைப்படுவார்கள்.ஆனால்,தற்போது ஒரு வருடத்திற்கு 67,218 மறுத்துவர்களையே உருவாக்குகிறோம்.மூளையைக் கசக்கினால்,"கணக்கு பிணக்கு ஆமணக்கு கதையில் தான் முடியும்.
இந்தியாவிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகளை வைத்திருக்கும் மாநிலமான தமிழ்நாட்டிலேயே,சுகாதாரம் ஊசிபோயிருக்கும் நிலையில் மாநிலத்துக்கு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்றும் தங்களுக்கு மருத்துவக் கல்லூரியே வேண்டாம் என்று பெருந்தன்மை கொண்ட வடகிழக்கு மாநிலங்களின் நிலைமை என்ன?
இன்று ,கூலி வேலைகளுக்காக தென்னிந்திய மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்துள்ள வடைந்தியர்கள்,நாளை ஆரம்ப சுகாதாரத்திற்காகவும் இடம்பெயரும் அவலம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் தான் எழுகிறது.மேரிக்கோம், ஹிமா தாஸ் போன்ற விளையாட்டு வீராங்கனைகளை உருவாக்கி தந்து இந்தியாவின் பதக்கப் பஞ்சத்தை தக்க சமயத்தில் காப்பாற்றி தரும் அந்த மாநிலங்களுக்கு உரிய நேரத்தில் உயிர் காக்கும் உயர் சிகிச்சையை செய்துகொடுப்பதும் நம் கடமையன்றோ?
இத்தனை பிரச்சனைகளையும் வைத்துக்கொண்டு நாம் போராடிக் கொண்டிருக்கும் இந்நிலையில் தான் உலகமே இந்தியாவை ஒரு மருத்துவச் சந்தையாகச் சிந்திக்க தொடங்கிவிட்டது.உலக வணிகச்சந்தையின் பார்வையில் ஏழையும் பணக்காரனே,அவனுடைய உடல் உறுப்புகள் செயலாற்றுப் போகும் வரை.பிள்ளையின் படிப்பை விடவும்,மகளின் திருமணத்தை விடவும்,தன் உறுப்புகள் பெரிதல்ல என்று நினைக்கும் இந்தியா மாமனிதர்கள் இருக்கும் வரை,செயலற்றுக்கொண்டிருக்கும் பணக்காரர்களின் இதயங்களும் சிறுநீரகங்களும் கவலை கொள்ள தேவையில்லை.
உறுப்புமாற்று அறுவை சிகிச்சையில்,உலகத்தின் வல்லரசு நாடுகளோடு போட்டிபோட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்கிறீர்கள்.எது முன்னேற்றம்?,இல்லாதவனிடம் இருக்கும் எல்லாமுமான அவன் உறுப்புகளைப் பிடுங்கி,எல்லாம் இருந்தும் தன்னை சீர்குலைத்துக்கொண்ட கோமளிக்கு தானம் செய்கிறீரே அதுதான் முன்னேற்றமா?
இன்று இந்தியாவில் 1,75,000 சிறுநீரகங்கள் தேவைப்படுகின்றன,இருப்பதோ ஐயாயிரம் தான்.50,000 இதயங்கள் தேவையில் உள்ளன,இருப்பதோ முப்பது.50,000 கல்லீரல்கள் தேவைக்கு 700 மட்டுமே உள்ளன.தேவைக்கும் இருப்பிற்கும் இருக்கும் இந்த இமாலய இடைவேளை தான் பணம் விளையாட முதல் போடுகிறது.கடைசியில் திருவள்ளுவன் வாக்கு தான் சரியோ,
"பொருள்ளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை",உலகம் இல்லாமல் போகட்டும் உடலும் உயிரும் கூடவா மிஞ்சக்கூடாது.
"எல்லா உறுப்புகளையும் தானம் கொடுத்துவிட்டு வெறும் சுவடோடும் நினைவோடும் வாழ்வதற்கு மனிதர்கள் என்ன மரமா?"
சிந்திப்போம் ; சந்திப்போம் வரும் வாரங்களில்....
#கழுத
இந்திய மருத்துவச் சந்தை
நோய் வருவதற்கான முக்கியமான காரணிகள் இரண்டு
ஒன்று:அடிப்படைச் சுற்றுபுரச் சூழல்
மற்றோன்று:மருத்துவக் கட்டமைப்பு அடிப்படைச் சூழலை முழுவதுமாக மாற்றிவிட்டோம்;நம் நாடா என்ற நிலைக்கு தள்ளிவிட்டோம்.மருத்துவக் கட்டமைப்போ "இருக்கு ஆனா இல்ல"என்பது போன்ற நிலை தான்.சில இடங்களில் கட்டடங்கள் உள்ளன,அனால் மருத்துவர்கள் இல்லை.சிலவற்றிலோ மருத்துவர்கள் உள்ளனர்,கட்டடங்கள் இல்லை.
நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து 479 மருத்துவக் கல்லூரிகளைக் கட்டியுள்ளோம்-130 கோடி மக்களுக்கு.இளையர்கள் அதிகம் உள்ள நாடு என்று பெருமை பேசிக்கொண்டு திரிகிறோமே.அடுத்த 20 ஆண்டுகளில் முதியோர்களை அதிகம் கொண்ட நாடாக பரிணமிக்க போகிறோம்.அப்போது,52 லட்சம் மருத்துவர்களும் ,1000 நோயாளிகளுக்கு 4 மருத்துவர்களும் தேவைப்படுவார்கள்.ஆனால்,தற்போது ஒரு வருடத்திற்கு 67,218 மறுத்துவர்களையே உருவாக்குகிறோம்.மூளையைக் கசக்கினால்,"கணக்கு பிணக்கு ஆமணக்கு கதையில் தான் முடியும்.
இந்தியாவிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகளை வைத்திருக்கும் மாநிலமான தமிழ்நாட்டிலேயே,சுகாதாரம் ஊசிபோயிருக்கும் நிலையில் மாநிலத்துக்கு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்றும் தங்களுக்கு மருத்துவக் கல்லூரியே வேண்டாம் என்று பெருந்தன்மை கொண்ட வடகிழக்கு மாநிலங்களின் நிலைமை என்ன?
இன்று ,கூலி வேலைகளுக்காக தென்னிந்திய மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்துள்ள வடைந்தியர்கள்,நாளை ஆரம்ப சுகாதாரத்திற்காகவும் இடம்பெயரும் அவலம் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் தான் எழுகிறது.மேரிக்கோம், ஹிமா தாஸ் போன்ற விளையாட்டு வீராங்கனைகளை உருவாக்கி தந்து இந்தியாவின் பதக்கப் பஞ்சத்தை தக்க சமயத்தில் காப்பாற்றி தரும் அந்த மாநிலங்களுக்கு உரிய நேரத்தில் உயிர் காக்கும் உயர் சிகிச்சையை செய்துகொடுப்பதும் நம் கடமையன்றோ?
இத்தனை பிரச்சனைகளையும் வைத்துக்கொண்டு நாம் போராடிக் கொண்டிருக்கும் இந்நிலையில் தான் உலகமே இந்தியாவை ஒரு மருத்துவச் சந்தையாகச் சிந்திக்க தொடங்கிவிட்டது.உலக வணிகச்சந்தையின் பார்வையில் ஏழையும் பணக்காரனே,அவனுடைய உடல் உறுப்புகள் செயலாற்றுப் போகும் வரை.பிள்ளையின் படிப்பை விடவும்,மகளின் திருமணத்தை விடவும்,தன் உறுப்புகள் பெரிதல்ல என்று நினைக்கும் இந்தியா மாமனிதர்கள் இருக்கும் வரை,செயலற்றுக்கொண்டிருக்கும் பணக்காரர்களின் இதயங்களும் சிறுநீரகங்களும் கவலை கொள்ள தேவையில்லை.
உறுப்புமாற்று அறுவை சிகிச்சையில்,உலகத்தின் வல்லரசு நாடுகளோடு போட்டிபோட்டு முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்கிறீர்கள்.எது முன்னேற்றம்?,இல்லாதவனிடம் இருக்கும் எல்லாமுமான அவன் உறுப்புகளைப் பிடுங்கி,எல்லாம் இருந்தும் தன்னை சீர்குலைத்துக்கொண்ட கோமளிக்கு தானம் செய்கிறீரே அதுதான் முன்னேற்றமா?
இன்று இந்தியாவில் 1,75,000 சிறுநீரகங்கள் தேவைப்படுகின்றன,இருப்பதோ ஐயாயிரம் தான்.50,000 இதயங்கள் தேவையில் உள்ளன,இருப்பதோ முப்பது.50,000 கல்லீரல்கள் தேவைக்கு 700 மட்டுமே உள்ளன.தேவைக்கும் இருப்பிற்கும் இருக்கும் இந்த இமாலய இடைவேளை தான் பணம் விளையாட முதல் போடுகிறது.கடைசியில் திருவள்ளுவன் வாக்கு தான் சரியோ,
"பொருள்ளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை",உலகம் இல்லாமல் போகட்டும் உடலும் உயிரும் கூடவா மிஞ்சக்கூடாது.
"எல்லா உறுப்புகளையும் தானம் கொடுத்துவிட்டு வெறும் சுவடோடும் நினைவோடும் வாழ்வதற்கு மனிதர்கள் என்ன மரமா?"
சிந்திப்போம் ; சந்திப்போம் வரும் வாரங்களில்....
No comments:
Post a Comment