Saturday, 18 August 2018

தலையங்கம்

இந்திய மருத்துவச் சந்தை

#கழுத

சிசு மரணம்:
           ஒரு 30,40 வருடங்களுக்கு முன்பு பெண் சிசுக்கொலை நம் நாட்டை பெரிதும் அச்சுறுத்திக் கொண்டிருந்தது.அதிலிருந்து பக்குவமாக விடுபட்டு விட்டோம்.ஆனால் இன்று சிசுக்களின் இயற்கை மரணத்தால் செய்வதறியாது முழித்துக்கொண்டிருக்கிறோம்.
         உலக அளவில் நிகழும் சிசுக்களின் இறப்பில் கால் பங்கு இறப்புகள் இந்தியாவில் பதிவாகிக்கொண்டிருக்கின்றன.
         முக்கியமாக சிசு இறப்பு சதவீதம் அதிகம் வைத்துள்ள மாநிலங்கள்
             உத்திர பிரதேசம்
             மத்திய பிரதேசம் 
             ராஜஸ்தான்
             பீஹார்   
              உத்திர பிரதேசத்தில் சென்ற ஆண்டில் மட்டும் 60,000 சிசுக்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
                சிகிச்சை பெறும் 1000 குழந்தைகளில் 45 குழந்தைகள் இறந்துவிடுகின்றன.
               இயற்கையாகவே இத்தனை குழந்தைகள் இறந்துகொண்டிருக்கும் நிலையில் கோரக்பூரில் சென்ற வருடம் நிகழ்ந்த சம்பவம் நிலைகுலைய வைப்பதுவே.
            60 குழந்தைகளில் 30 க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆக்ஸிஜன் சிலிண்டர் பற்றாக்குறையால் இறந்துபோயுள்ளனர்.
             சிலிண்டர் விநியோகிக்கும் நிறுவனத்திடம் வைத்திருந்த நிலுவைத்தொகையே(60 லட்சம்) இந்த உயிரப்புகளுக்கான காரணமாம்.
              உயிர்காக்கும் கருவிகளுக்கான பணத்தை கூட செலுத்த முடியாத நிதி நெருக்கடியிலா அரசு இருந்திருக்கும்.நிச்சயம் இல்லை. 
       "உயிர் தானே என்ற ஏளனமா?" இல்லை
         "தன் உயிர்க்கு இடர் இல்லை என்ற மெத்தனமா?"
          உயர் மருத்துவச் சிகிச்சைகள் வேண்டாம்;அடிப்படைத் தேவைகள் கூடவா அலட்சியம் செய்யப்பட வேண்டும்.
           பிறகு எதற்காக வரி செலுத்துகிறோம்?
தனி மனித தேவைகளைப் பூர்த்தி செய்த பிறகே ஒரு நாடு வல்லரசைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
         ராக்கெட் விட்டால் என்ன? போர்க்கப்பல் வாங்கினால் என்ன? சுவரில்லாமல் சித்திரம் ஏது?

மருத்துவக் காப்பீடு :

          காப்பீடு என்பது  எதிர்பாராத வகையில் நிகழும் அசம்பாவித சம்பவங்களுக்கான முன்னெச்சரிக்கை ஆகும்.
           வாகனங்கள் போன்ற பலவற்றிற்கும் காப்பீடு உண்டு.அதேபோல் மருத்துவ காப்பீட்டுத்திட்டமும் உருவாக்கப்பட்டது.இந்திய அளவில் காங்கிரஸ் ஆட்சியில் "ராஸ்ட்ரிய ஸ்வஸ்தா பிமா யோஜ்னா" என்ற காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் இருந்தது.அதன் மூலம் ஒரு நபர் அதிகபட்சம் 30,000 ரூபாய் வரையிலும் காப்பீடு பெறலாம், மாதமாதம் காப்பீட்டுக் கட்டணமாக ரூபாய் 30 செலுத்த வேண்டும்.
        இதன் பயன் முழுவதுமாக பொதுமக்களைச் சென்றடையவில்லை.இதனை தற்போது விரிவுபடுத்தி தற்போது "மோடிகேர்" என்ற பெயரில் பிரதமர் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.
        இந்தத் திட்டத்தின் கீழ் 10 கோடி குடும்பங்களும் 50 கோடி மக்களும் பயன் பெறுவர்.இதன் காப்பீட்டுத் தொகை ரூபாய் 5,00,000 தோராயமாக பார்த்தால் 40 சதவீதம் இந்தியர்கள், வருமைக் கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் பயன் பெறுவார்களாம்.இந்தக் காப்பீட்டுத் தொகையில் 60 சதவீதத்தை மத்திய அரசும் மீதி உள்ளவற்றை மநில அரசுகள் செலுத்துமாம்.இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு 50,000 கோடி ரூபாய்.
       இந்தத் திட்டத்தை அலசிபௌ பார்த்தால் அமெரிக்காவின் "ஒபாமா கேர்" திட்டத்தோடு மிகச் சரியாய்  பொருந்தும்.
         அந்த திட்டத்திற்கு என்ன நேர்ந்தது என்பது அனைவரும் அறிந்ததே...அந்த திட்டத்தில் ஒபாமா 2.6 கோடி மக்களுக்கு 2 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கினார்.அமெரிக்காவின் பொருளாதாரத்திற்கே 3 கோடி மக்களின் மருத்துவச் செலவிற்கு 2 லட்சம் கோடி ரூபாய் என்றால் நமது 50 கோடி மக்களுக்கான 50,000 கோடி ரூபாயை சந்தேகக் கண்ணுடனே பார்க்க வேண்டி உள்ளது. இந்தியாவில் ஏற்கனவே தமிழ்நாடு, ஆந்திரா,கர்நாடகா,ராஜஸ்தான், கோவா,குஜராத் போன்ற மாநிலங்கள் தங்கள் மாநிலத்துக்கு என்று தனியாக காப்பீட்டுத்திட்டங்கள் வைத்துள்ளன.
       அப்படியிருக்கையில், அந்த மாநிலங்கள் சொந்த காப்பீட்டுத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குமா,இல்லை "மோடிகேர்" திட்டத்திற்கு நிதி ஒதுக்குமா.
               இரண்டிற்கும் ஒதுக்க வேண்டுமெனில் ,தமிழ் நாட்டில் தெருதோரும் மதுபானக் கடைகள் திறந்தால் மட்டுமே அது சாத்தியம்.
                எந்த வித காப்பீட்டுத் திட்டமும் இல்லாத மாநிலங்களான
                மத்திய பிரதேசம்
                ஹரியானா
                நாகலாந்து
                சிக்கிம்     போன்ற மாநிலங்களுக்கு பலன் கிடைக்குமா என்றால் மேற்சொன்ன மாநிலங்களில் மருத்துவமனைகளே இல்லாத நிலையில் காப்பீடு எங்கிருந்து வரும்.
           மருத்துவக் காப்பீடு மிகவும் அவசியமான ஒன்று.ஸ்கேன் எடுப்பதற்கு கூட இந்தக் காப்பீட்டை மட்டுமே நம்பி பலர் உள்ளனர்.அவர்களின் நம்பிக்கைக்கு ஒளி ஏற்றி வைப்பதே அரசின் கடமையாகும்.ஒளியேற்றாவிட்டாலும் பரவாயில்லை; குருடனாக்கிவிடாதீர்கள்!!!

                   

No comments:

Post a Comment

தலையங்கம்

#309 #வினோதினி #மார்பகப் புற்றுநோய் மார்பகப் புற்றுநோய் எப்பொழுதும்போல் அவசர அவசரமாக கிளம்பி 7.30 மணிக்கெல்லாம் அறுவை சிகிச்சைத் துறைய...