#தமிழனுக்கு ஒரு கடிதம்
#மிகலி
பழங்காலத்தில் காலட்சேபங்கள், உபந்யாசங்கள்; இக்காலத்தில் பொதுக்கூட்டங்கள், மாநாடுகள்; இவ்வளவுதான் வேறுபாடு. பழங்காலத்தில் உருக்கமாகக் கேட்டுவிட்டு வீட்டுக்குப்போய் பழைய இரக்கமற்ற வாழ்க்கையையே நடத்திவந்தார்கள். இக்காலத்தில் உணர்ச்சியோடு கேட்டுவிட்டு வீட்டுக்குப் போய்ப்பழைய கவலையற்ற வாழ்க்கையையே நடத்திவருக்கிறார்கள்.
நாட்டின் நிலைமையை நேரில் கண்டு வறுமையால் வாடுகின்றவர்களின் துன்பங்களை நேரில் உணர்ந்து அடைகின்ற கொதிப்பு வேதனை துடிப்பு எல்லாம் ஓர் அழகான பேச்சைக்கேட்டுக் கைதட்டியவுடன் தணிந்து ஆறிப்போகின்றன. உள்ளம் உணர்ந்த உணர்ச்சி நேரே ஆக்கவேலைக்குப் பயன்படாதபடி, குறுக்கே இந்தப் பேச்சின்பம் பாழ்படுத்துகின்றது. இதுவே அரசியல் காலட்சேபத்தின் பயன்!
பேச்சு அடியோடு வேண்டாம் என்று கூறவில்லை. அதை ஒரு கலையாக்கி அதுவே நாட்டுத் தொண்டு என்று கருதிவிட வேண்டாம் என்று கூறுகின்றேன். கருத்துக்களைத் தெரிவிப்பதற்குப் பேச்சு வேண்டும். அதை ஓர் அளவிற்கு நிறுதிக்கொண்டால் போதும்.
இன்னும் ஒன்று சொல்லத் தோன்றுகிறது. மேடைப் பேச்சுக்களைவிடச் செய்தித்தாள்களும் வார இதழ்களும் மேலானவை. மேடைப் பேச்சால் தெரிவிக்கப்படும் கருத்து ஒரு நொடிப்பொழுது நெஞ்சில் நின்று உடனே மாறிப்போகின்றது. ஆனால் வார இதழ்களாலும், செய்தித்தாள்களாலும் தெரிவிக்கப்படும் கருத்து மூளையில் ஆழப் பதிந்து நிலையாக நிற்கின்றது. அதனால் பல மாநாடுகளை விட செல்வாக்கு உள்ள வார இதழ் ஒன்று வல்லமையான வேலை செய்கின்றது என்று கூற வேண்டும். முன்பு ஒருமுறை எழுதியதுபோல் பல கட்டை வண்டிகளைவிட லாரி ஒன்று மிகுதியான வேலை செய்ய முடியும் அல்லவா?
-வரும் வாரமும் தொடரும்.....
#மிகலி
பழங்காலத்தில் காலட்சேபங்கள், உபந்யாசங்கள்; இக்காலத்தில் பொதுக்கூட்டங்கள், மாநாடுகள்; இவ்வளவுதான் வேறுபாடு. பழங்காலத்தில் உருக்கமாகக் கேட்டுவிட்டு வீட்டுக்குப்போய் பழைய இரக்கமற்ற வாழ்க்கையையே நடத்திவந்தார்கள். இக்காலத்தில் உணர்ச்சியோடு கேட்டுவிட்டு வீட்டுக்குப் போய்ப்பழைய கவலையற்ற வாழ்க்கையையே நடத்திவருக்கிறார்கள்.
நாட்டின் நிலைமையை நேரில் கண்டு வறுமையால் வாடுகின்றவர்களின் துன்பங்களை நேரில் உணர்ந்து அடைகின்ற கொதிப்பு வேதனை துடிப்பு எல்லாம் ஓர் அழகான பேச்சைக்கேட்டுக் கைதட்டியவுடன் தணிந்து ஆறிப்போகின்றன. உள்ளம் உணர்ந்த உணர்ச்சி நேரே ஆக்கவேலைக்குப் பயன்படாதபடி, குறுக்கே இந்தப் பேச்சின்பம் பாழ்படுத்துகின்றது. இதுவே அரசியல் காலட்சேபத்தின் பயன்!
பேச்சு அடியோடு வேண்டாம் என்று கூறவில்லை. அதை ஒரு கலையாக்கி அதுவே நாட்டுத் தொண்டு என்று கருதிவிட வேண்டாம் என்று கூறுகின்றேன். கருத்துக்களைத் தெரிவிப்பதற்குப் பேச்சு வேண்டும். அதை ஓர் அளவிற்கு நிறுதிக்கொண்டால் போதும்.
இன்னும் ஒன்று சொல்லத் தோன்றுகிறது. மேடைப் பேச்சுக்களைவிடச் செய்தித்தாள்களும் வார இதழ்களும் மேலானவை. மேடைப் பேச்சால் தெரிவிக்கப்படும் கருத்து ஒரு நொடிப்பொழுது நெஞ்சில் நின்று உடனே மாறிப்போகின்றது. ஆனால் வார இதழ்களாலும், செய்தித்தாள்களாலும் தெரிவிக்கப்படும் கருத்து மூளையில் ஆழப் பதிந்து நிலையாக நிற்கின்றது. அதனால் பல மாநாடுகளை விட செல்வாக்கு உள்ள வார இதழ் ஒன்று வல்லமையான வேலை செய்கின்றது என்று கூற வேண்டும். முன்பு ஒருமுறை எழுதியதுபோல் பல கட்டை வண்டிகளைவிட லாரி ஒன்று மிகுதியான வேலை செய்ய முடியும் அல்லவா?
-வரும் வாரமும் தொடரும்.....
No comments:
Post a Comment