#கவிதை
#மாயாவி
மொட்டவிழ்த்த மலர்களின்மேல்
பட்டுவிட்ட பனியின் துளிகளில்
தேடிக் கொண்டிருக்கிறேன் - என்
பால்யத்தை...
என் சருகுகளுக்கு ஜீவனூட்ட,
காற்றோடு கலந்துவிடாது
காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன் -
பனித்துளிகளுள் ஒன்றிரண்டை...
வண்ணத்துப்பூச்சிகளின் வர்ணம்பூசி
வட்டமடித்துக் கொண்டிருக்கிறேன்,
வாடிய பாரிஜாதங்களைச் சுற்றி -
என் வாசனையைத் தேடி...
மழைக்கால மண்வாசனையிடம்
தேம்பிக் கொண்டிருக்கிறேன் -
என் மழலை மணத்தை
கையோடு கூட்டிவரச் சொல்லி...
சக்கரங்களற்றுக் கிடக்கும்
நடைவண்டியையும்
வண்டி பொம்மைகளையும்
தடவிப் பார்க்கிறேன் -
என் அந்தக்கால அந்தரங்களை
அறியும் ஆவலில்...
வானவீதியில் கொட்டிக்கிடக்கும்
விண்மீன்களிடம்
விசாரித்துப் பார்க்கிறேன் -
என் கனவுகள்
விசித்திரமா விசாலமா என்று...
செல்லரித்துப் போன
பென்சில் சீவல்களிடத்தில்
பேசிக் கொண்டிருக்கிறேன் -
என் செல்லக் குறும்புகள் பற்றி...
திக்குக்கொன்றாய்க் கிடக்கும்
பல்பத் துண்டுகளுள்
என் வாய்பட்டதனால் முறிந்தவைகளைச்
சேகரித்துக் கொள்கிறேன்;
சிங்காரச் சிரிப்பொலிகளையும் தான்...
மந்தமாருதத்தினூடே சென்று
தேடிப் பார்க்கிறேன் -
நான் மறைத்து வைத்த
என் முதலிரண்டு பற்களை...
தூசி துடைத்துக்
குலுக்கிப் பார்க்கிறேன்,
களிமண் உண்டியலை -
பைசாவையும்
பாட்டியையும்
பண்டிகைகளையும்
பஞ்சுமிட்டாய்களையும்
பலூன்களையும்
நினைத்துக் கொண்டே...
புருவங்களோடு நின்றுவிட்ட
மழைத்துளிகளை
ஆராய்ந்து பார்க்கிறேன் -
என் சின்னக் கன்னங்களில் வழிந்தோடிய
கண்ணீர்த் துளிகளின்
தூய்மை கண்டறிய...
மாரிக்காலத்துத் தடாகங்களில் நிற்கும்
என் காகிதக் கப்பல்களை
அவ்வப்போது பார்த்துக்கொண்டேயிருக்கிறேன் -
தூரதேசம் சென்று
கோலோச்சும் ஆசையில்...
நான் தின்று தீர்த்த
மிட்டாய்களின் பெயர்களை
விரல்விட்டு எண்ணிப்பார்க்கிறேன்;
அவை பத்தைக் கடந்ததும்
எந்த விரல்கொண்டெண்ணுவது என
யோசித்துக் கொண்டே...
இன்றைக்கும்
பாதி வயிறு நிரம்பியவாறே
உறங்கச் செல்கிறேன் -
இன்றைக்காவது
வயிற்றைத் தடவிப் பார்க்க
கடவுள் வருவாரா என்று பார்க்க;
போலித் தூக்கம் தூங்கிக் கொண்டே...
கரைந்து கொண்டேயிருக்கும்
காலத்திடம்
கேட்டுக் கொண்டேயிருக்கிறேன்
கண்ணீருடன் -
காணாமல்போன என்னைக்
கண்டுபிடித்துத் தருமாறு...
#மாயாவி
மொட்டவிழ்த்த மலர்களின்மேல்
பட்டுவிட்ட பனியின் துளிகளில்
தேடிக் கொண்டிருக்கிறேன் - என்
பால்யத்தை...
என் சருகுகளுக்கு ஜீவனூட்ட,
காற்றோடு கலந்துவிடாது
காப்பாற்றிக் கொண்டிருக்கிறேன் -
பனித்துளிகளுள் ஒன்றிரண்டை...
வண்ணத்துப்பூச்சிகளின் வர்ணம்பூசி
வட்டமடித்துக் கொண்டிருக்கிறேன்,
வாடிய பாரிஜாதங்களைச் சுற்றி -
என் வாசனையைத் தேடி...
மழைக்கால மண்வாசனையிடம்
தேம்பிக் கொண்டிருக்கிறேன் -
என் மழலை மணத்தை
கையோடு கூட்டிவரச் சொல்லி...
சக்கரங்களற்றுக் கிடக்கும்
நடைவண்டியையும்
வண்டி பொம்மைகளையும்
தடவிப் பார்க்கிறேன் -
என் அந்தக்கால அந்தரங்களை
அறியும் ஆவலில்...
வானவீதியில் கொட்டிக்கிடக்கும்
விண்மீன்களிடம்
விசாரித்துப் பார்க்கிறேன் -
என் கனவுகள்
விசித்திரமா விசாலமா என்று...
செல்லரித்துப் போன
பென்சில் சீவல்களிடத்தில்
பேசிக் கொண்டிருக்கிறேன் -
என் செல்லக் குறும்புகள் பற்றி...
திக்குக்கொன்றாய்க் கிடக்கும்
பல்பத் துண்டுகளுள்
என் வாய்பட்டதனால் முறிந்தவைகளைச்
சேகரித்துக் கொள்கிறேன்;
சிங்காரச் சிரிப்பொலிகளையும் தான்...
மந்தமாருதத்தினூடே சென்று
தேடிப் பார்க்கிறேன் -
நான் மறைத்து வைத்த
என் முதலிரண்டு பற்களை...
தூசி துடைத்துக்
குலுக்கிப் பார்க்கிறேன்,
களிமண் உண்டியலை -
பைசாவையும்
பாட்டியையும்
பண்டிகைகளையும்
பஞ்சுமிட்டாய்களையும்
பலூன்களையும்
நினைத்துக் கொண்டே...
புருவங்களோடு நின்றுவிட்ட
மழைத்துளிகளை
ஆராய்ந்து பார்க்கிறேன் -
என் சின்னக் கன்னங்களில் வழிந்தோடிய
கண்ணீர்த் துளிகளின்
தூய்மை கண்டறிய...
மாரிக்காலத்துத் தடாகங்களில் நிற்கும்
என் காகிதக் கப்பல்களை
அவ்வப்போது பார்த்துக்கொண்டேயிருக்கிறேன் -
தூரதேசம் சென்று
கோலோச்சும் ஆசையில்...
நான் தின்று தீர்த்த
மிட்டாய்களின் பெயர்களை
விரல்விட்டு எண்ணிப்பார்க்கிறேன்;
அவை பத்தைக் கடந்ததும்
எந்த விரல்கொண்டெண்ணுவது என
யோசித்துக் கொண்டே...
இன்றைக்கும்
பாதி வயிறு நிரம்பியவாறே
உறங்கச் செல்கிறேன் -
இன்றைக்காவது
வயிற்றைத் தடவிப் பார்க்க
கடவுள் வருவாரா என்று பார்க்க;
போலித் தூக்கம் தூங்கிக் கொண்டே...
கரைந்து கொண்டேயிருக்கும்
காலத்திடம்
கேட்டுக் கொண்டேயிருக்கிறேன்
கண்ணீருடன் -
காணாமல்போன என்னைக்
கண்டுபிடித்துத் தருமாறு...
No comments:
Post a Comment