#தமிழனுக்கு ஒரு கடிதம்
#மிகலி
எழில், தமிழ்ப் பற்றையும் தமிழ்நாட்டுப் பற்றையும் போற்றுகிறேன்; வாழ்த்துகிறேன். ஆனால், இன்றைய கடிதத்தில் நீ எழுதியது போன்ற வீண் கனவு மட்டும் வேண்டாம். மேடைப் பேச்சு நம்முடைய உணர்ச்சி வெள்ளத்திற்குப் பெரிய வாய்க்காலக இருந்து ஆத்திரத்தைத் தணித்து வற்றச்செய்து நம்மைச் சோம்பேறிகளாக ஆக்குவது போல், இப்படிப்பட்ட வீண்கனவுகள் நம்மை வீணர்களாக ஆக்காமலிருக்க வேண்டும் என்று எண்ணத்தால் இதைத் குறிப்பிடுகிறேன். வேறொன்றும் தவறாக எண்ண வேண்டாம்.
நான் எதை வீண் கனவு என்று குறிப்பிடுகிறேன், தெரியுமா?திருக்குறள் ஓதியே திருமணம் நிகழ வேண்டும், தமிழ்நாட்டுக் கோவில்களில் உத்தமர்களின் தமிழ்ப்பாட்டு முழங்க வேண்டும், அதிகாரிகள் தமிழை மதிப்பவர்களாக இருக்க வேண்டும், கவர்னர் தமிழில் கையெழுத்து இடவேண்டும் என்னும் இவைகளை ஒருகாலும் வீண்கனவு என்று ஒதுக்கவே மாட்டேன். இது உனக்கே தெரியும். தமிழுக்கோ தமிழ்நாட்டுக்கோ பகைவனாக இருப்பவன் தான், இந்த நல்லெண்ணங்களை வீண் கனவு என்று குறைகூறுவான். நம் தாயை நாம் வழிபட்டு, நம் குடும்பக் கடமையை நாம் ஆர்வத்தோடு செய்யும்போது,இதைத் தவறு என்றும் குறுகிய நோக்கம் என்றும் ஒருவன் குருக்கிடுவானால், அவனைப் பகைவன் என்று ஒதுக்குவதே கடமையாகும்.
தம்பி!
எழில், நீ இன்னொன்று கவனித்திருப்பாய். தமிழராகிய நம்மிடம் ஒரு பெருங் குறை இருந்துவருகிறது. அது வேறொன்றும் அல்ல; பிறருடைய சொல்லால் மயங்கும் பேதைமை நமக்கு மிகுதியாக இருக்கிறது. மற்றவர்கள் இதைத் தெரிந்து கொண்டுதான், உயர்ந்த சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்லித் தமிழரை ஏமாற்ற முடிகிறது. மக்களுக்குள் எந்த வகையான வேறுபாடும் வேண்டாம். கடவுள் படைப்பில் எல்லோரும் சமம் என்ற உயர்ந்தப் பேச்சைத் தமிழரிடம் ஒருவர் பேசட்டும்;கேட்ட தமிழர் பற்றை உடனே வெறுப்பார், துறப்பார்; எந்த வேறுபாடும் இல்லாத தூய வாழ்கையைத் தொடங்கிவிடுவார். காரணம் என்ன, தெரியுமா?தமிழர்நெஞ்சம் உயர்ந்த கொள்கைகளை உணர்ந்து உணர்ந்து தலைமுறை தலைமுறையாகப் பண்பட்டுவந்தது. அதனால், சொல்கிறவர் யார், உண்மையாக உணர்ந்து சொல்கிறாரா, நம்மை எம்மாற்றச் சொல்கிறாரா, அவர் எந்த வேறுபாடும் பார்க்காமல், வாழ்கிறாரா என்றெல்லாம் ஆராய்ந்துப்பார்க்காமல், உடனே தாம் அந்த கொள்கையை நம்பி உணர்ந்து வாழத் தொங்கிவிடுவார். இது நல்லதுதான். சொல்லப்பட்ட உண்மயை எடுத்துக் கொள்வது எப்போதும் நல்லதுதான்.
அதற்கு வழி இதுதான்; தமிழர்களை சிறிது நேரம் உணர்ச்சிவெள்ளத்தில் மூழ்கடித்துப் பிறகு வறண்ட பாலையில் திகைக்கவிடும் போக்கைவிட்டு, அவர்களைக் கடமைப் பற்றுஉடைய செயல்வீரர்களாக ஆக்க வேண்டும். உன்னுடைய எழுத்தில் அந்த உணர்ச்சிவெல்லத்தைக் கண்டதால்தான் நான் இதை குறிப்பிடுகிறேன். நீ சர்வாதிகாரியாக ஆவதுபற்றி எனக்குத் தடை இல்லை.ஆனால், அந்தப் போதையில் மயங்கி அன்றாடக் கடைமையை மறந்து விடாதே; மற்றவர்களையும் மறக்கவிடாதே.
கடிதம் தொடரும்...
#மிகலி
எழில், தமிழ்ப் பற்றையும் தமிழ்நாட்டுப் பற்றையும் போற்றுகிறேன்; வாழ்த்துகிறேன். ஆனால், இன்றைய கடிதத்தில் நீ எழுதியது போன்ற வீண் கனவு மட்டும் வேண்டாம். மேடைப் பேச்சு நம்முடைய உணர்ச்சி வெள்ளத்திற்குப் பெரிய வாய்க்காலக இருந்து ஆத்திரத்தைத் தணித்து வற்றச்செய்து நம்மைச் சோம்பேறிகளாக ஆக்குவது போல், இப்படிப்பட்ட வீண்கனவுகள் நம்மை வீணர்களாக ஆக்காமலிருக்க வேண்டும் என்று எண்ணத்தால் இதைத் குறிப்பிடுகிறேன். வேறொன்றும் தவறாக எண்ண வேண்டாம்.
நான் எதை வீண் கனவு என்று குறிப்பிடுகிறேன், தெரியுமா?திருக்குறள் ஓதியே திருமணம் நிகழ வேண்டும், தமிழ்நாட்டுக் கோவில்களில் உத்தமர்களின் தமிழ்ப்பாட்டு முழங்க வேண்டும், அதிகாரிகள் தமிழை மதிப்பவர்களாக இருக்க வேண்டும், கவர்னர் தமிழில் கையெழுத்து இடவேண்டும் என்னும் இவைகளை ஒருகாலும் வீண்கனவு என்று ஒதுக்கவே மாட்டேன். இது உனக்கே தெரியும். தமிழுக்கோ தமிழ்நாட்டுக்கோ பகைவனாக இருப்பவன் தான், இந்த நல்லெண்ணங்களை வீண் கனவு என்று குறைகூறுவான். நம் தாயை நாம் வழிபட்டு, நம் குடும்பக் கடமையை நாம் ஆர்வத்தோடு செய்யும்போது,இதைத் தவறு என்றும் குறுகிய நோக்கம் என்றும் ஒருவன் குருக்கிடுவானால், அவனைப் பகைவன் என்று ஒதுக்குவதே கடமையாகும்.
தம்பி!
எழில், நீ இன்னொன்று கவனித்திருப்பாய். தமிழராகிய நம்மிடம் ஒரு பெருங் குறை இருந்துவருகிறது. அது வேறொன்றும் அல்ல; பிறருடைய சொல்லால் மயங்கும் பேதைமை நமக்கு மிகுதியாக இருக்கிறது. மற்றவர்கள் இதைத் தெரிந்து கொண்டுதான், உயர்ந்த சொற்களைத் திரும்பத் திரும்பச் சொல்லித் தமிழரை ஏமாற்ற முடிகிறது. மக்களுக்குள் எந்த வகையான வேறுபாடும் வேண்டாம். கடவுள் படைப்பில் எல்லோரும் சமம் என்ற உயர்ந்தப் பேச்சைத் தமிழரிடம் ஒருவர் பேசட்டும்;கேட்ட தமிழர் பற்றை உடனே வெறுப்பார், துறப்பார்; எந்த வேறுபாடும் இல்லாத தூய வாழ்கையைத் தொடங்கிவிடுவார். காரணம் என்ன, தெரியுமா?தமிழர்நெஞ்சம் உயர்ந்த கொள்கைகளை உணர்ந்து உணர்ந்து தலைமுறை தலைமுறையாகப் பண்பட்டுவந்தது. அதனால், சொல்கிறவர் யார், உண்மையாக உணர்ந்து சொல்கிறாரா, நம்மை எம்மாற்றச் சொல்கிறாரா, அவர் எந்த வேறுபாடும் பார்க்காமல், வாழ்கிறாரா என்றெல்லாம் ஆராய்ந்துப்பார்க்காமல், உடனே தாம் அந்த கொள்கையை நம்பி உணர்ந்து வாழத் தொங்கிவிடுவார். இது நல்லதுதான். சொல்லப்பட்ட உண்மயை எடுத்துக் கொள்வது எப்போதும் நல்லதுதான்.
அதற்கு வழி இதுதான்; தமிழர்களை சிறிது நேரம் உணர்ச்சிவெள்ளத்தில் மூழ்கடித்துப் பிறகு வறண்ட பாலையில் திகைக்கவிடும் போக்கைவிட்டு, அவர்களைக் கடமைப் பற்றுஉடைய செயல்வீரர்களாக ஆக்க வேண்டும். உன்னுடைய எழுத்தில் அந்த உணர்ச்சிவெல்லத்தைக் கண்டதால்தான் நான் இதை குறிப்பிடுகிறேன். நீ சர்வாதிகாரியாக ஆவதுபற்றி எனக்குத் தடை இல்லை.ஆனால், அந்தப் போதையில் மயங்கி அன்றாடக் கடைமையை மறந்து விடாதே; மற்றவர்களையும் மறக்கவிடாதே.
கடிதம் தொடரும்...
No comments:
Post a Comment