Tuesday, 7 August 2018

#தொடர்கதை

  சதுர் -1
#நண்பன்     

ஜனவரி 26,2017 வழக்கம்போல பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் மும்பை, உயர்ந்த கட்டிடங்களுக்கு நடுவில் சீறிப்பாயும் கார்கள், காதைப்பிளக்கும் விமானத்தோட சத்தம், இதெல்லாம் தாண்டி ஒரு அமைதியான இடமும் இருக்கு, மும்பையோட இன்னொரு புறம் இருக்கிற ஒரு கல்லறை.
        பசுமையான புல்வெளிக்கு நடுவே பூக்களுடன் உறங்கிக் கொண்டிருக்கும் பவரின் உறவுகள், சிலரின் உறவுகள்.
படம் -1
        "விஷ்வா"...... 5 வருஷத்துக்கு முன்னாடி இந்தியாவோட "illegal" icons -அ அலறவெச்ச ஒரு பேர்.
        ஆனா இன்னிக்கு ஒரு பூங்கொத்தோட தன்னோட மனைவியப் பாக்க வந்திருக்கான், சின்ன சோகத்தோட.
        "மீரா"..... விஷ்வாவோட மனைவி,அம்மா,குழந்தை எல்லாமே அவனுக்கு அவள்தான்.
         ஆனா இன்னிக்கு அவள் இல்லை. காரணம் அவளுக்கு இணையா அவன் நேசிச்ச வேலை...
                       "CBI"
         காலைல பேஞ்ச சின்ன மழைல நனைஞ்ச புல்வெளிமேல ஒரு "car" வந்து நிக்குது.
           விஷ்வாவோட நண்பன் "ஜெகதீஸ்".....ஒரு நேர்மையான "Police officer".
           கைல ஒரு "Blue colour file",Black coat-ல மிடுக்கான நடையுடன் விஷ்வாவ நெருங்குறான்.
           எல்லார் சந்தோஷத்திலேயும், துக்கத்திலேயும் கூட இருந்த ஒருத்தன் இப்போ தனிமரமாக இருக்கான்.
           அவன் அவளோட கடமைய செய்யட்டும்னு கொஞ்சநேரம் அமைதியா நிற்கிறான் ஜெகதீஸ்.
           வழக்கம்போல தன்னோட மனைவியோட கல்லறைல தன்னோட பூங்கொத்த வச்சுட்டு திரும்புற நண்பன் கண்ணுல வர கண்ணீரப் பாத்ததும் ஒரு சின்ன தயக்கம்.
          தான் எதுக்கு வந்தோங்கிறத சொல்லலாமா? இல்ல வேணாமா?-னு யோசிச்சு நிக்குறான் ஜெகதீஸ்.
          இருந்தாலும் பழசையே யோசிச்சிட்டு இருக்கிறது எதையும் மாத்தப்போறதில்லைனு மனச கல்லாக்கிக்கிட்டு விஸ்வாவோட தோள தொட்டு அவன அமைதிப்படுத்துறான் ஜெகதீஸ்.
          அவனிடம் மெதுவாக "விஷ்வா....!  நீ திரும்பவும் department -ல join பண்ணனும்".
          ஒருவித வெறுப்புடன் தன் தோள்-ல கைய வச்ச நண்பனோட கைய எடுத்துவிடுகிறான் விஷ்வா.
          அவனிடம் "உனக்கே தெரியும் ,நான் எதுக்கு இந்த வேலையை விட்டு வந்தேனு, எனக்கு இனி இழக்க எதுவும் இல்ல ஜெகதீஸ்".
          "நான் இனிமேல் தனிமைல இருக்கிறதுதான் சரியா இருக்கும், என்ன விட்டிடு" என்கிறான்.
           கொஞ்சநேரம் அமைதியா இருந்த ஜெகதீஸ் ஒரு கனமான குரலில் "லீ இன்னும் சாகல, He is alive "என்கிறான்.
            "The secret agency has posted some images" என்கிறான்.
            உடனே தன்னோட கைல இருக்கிற files -அ விஷ்வாவிடம் நீட்டினான் ஜெகதீஸ்.
            அந்த files -அ open செய்கிறான் விஷ்வா.
(கதை 5 வருடம் பின்னோக்கி நகர்கிறது........)
                                                               -தொடரும்.......

No comments:

Post a Comment

தலையங்கம்

#309 #வினோதினி #மார்பகப் புற்றுநோய் மார்பகப் புற்றுநோய் எப்பொழுதும்போல் அவசர அவசரமாக கிளம்பி 7.30 மணிக்கெல்லாம் அறுவை சிகிச்சைத் துறைய...