#சிறகுகள்
#மாயாவி
என் சிறகுகள் மென்மையானவை. வெளிர்நிறம் கொண்ட அவைகளால் தான் இன்றும் பறந்து கொண்டிருக்கிறேன். உயரப் பறக்காவிடினும் சோர்ந்து அமர்ந்ததில்லை. என் சிறகுகளே என் பலம். இப்பூவுலகின் வண்ணங்களை நான் தரிசிக்க என்னை சுமந்து செல்வன என் மென்சிறகுகளே. என் வறண்ட தேகத்திற்கு உயிரூட்டிய ஜீவகாருண்யங்கள் அவை. என்னை நெருங்கும் போதெல்லாம் என் சிறகுகளைச் சற்று கவனித்துக்கொள் அன்பே. தீராத அன்பின் பலத்தால் அவை முறியக்கூடும். ஏனெனில் என் சிறகுகள் மென்மையானவை !
#மாயாவி
என் சிறகுகள் மென்மையானவை. வெளிர்நிறம் கொண்ட அவைகளால் தான் இன்றும் பறந்து கொண்டிருக்கிறேன். உயரப் பறக்காவிடினும் சோர்ந்து அமர்ந்ததில்லை. என் சிறகுகளே என் பலம். இப்பூவுலகின் வண்ணங்களை நான் தரிசிக்க என்னை சுமந்து செல்வன என் மென்சிறகுகளே. என் வறண்ட தேகத்திற்கு உயிரூட்டிய ஜீவகாருண்யங்கள் அவை. என்னை நெருங்கும் போதெல்லாம் என் சிறகுகளைச் சற்று கவனித்துக்கொள் அன்பே. தீராத அன்பின் பலத்தால் அவை முறியக்கூடும். ஏனெனில் என் சிறகுகள் மென்மையானவை !
No comments:
Post a Comment