Friday, 3 August 2018

தலையங்கம்

மனித கனவுகள் சொல்லும் கதை

#பாப்பு

ஒரு பெண்ணிற்கு வந்த சுவாரசியமான கனவு இது,
    கனவில் ,"ஒரு விஞ்ஞானி அவன் தேவைக்காக ஒரு அசுரன் போன்ற ஒரு உருவத்தை உருவாக்குகிறான்.அதன் பெயர் 'ஃபிராங்கண்ஸ்டைன்';ஆனால் அவன் உருவாக்கிய அசுரனைக் கண்டு நாளடைவில் அவனே பயப்படுகிறான்.இக்கனவு நம்மூர் பெண்களுக்கு வந்திருந்தால் சாமி குத்தம் என சொல்லி பல்வேறு பரிகாரங்களைச் செய்திருப்பர் இப்பேதைகள்.ஆனால் 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்த அந்த ஜெர்மன் பெண்ணிற்கு வந்த கனவு அவளை அடுப்பங்கறையில் இருந்து அகிலத்திற்கு சிறந்த எழுத்தாளராய் அள்ளித் தந்திருக்கிறது.இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் இந்த நாவலை அவள் 18 வயதில் தொடங்கி தனது 20 வயதில் முடித்திருக்கிறார். அதுவே உலகின் முதல் திகிலான அறிவியல் புனைக்கதை "ஃபிராங்கண்ஸ்டைன்".அத்தகைய ஆணாதிக்கம் இருந்த அக்காலத்திலும் தனது கனவை கதையாய் உருவாக்கியவர் தான் "மேரி ஸெல்லி".நாவல் வெளிவந்த ஆண்டோ 1821;ஆனால் அதைத் தழுவி எழும் சினிமா படங்களோ இன்றும் பார்வையாளர்களை "திக் திக் திக்" என பயப்படச் செய்கிறது.
        நாம் பள்ளி பயிலும் போது எவ்வளவு பாடங்கள் இருப்பினும் ,எது கடினம் ??? என யாராவது கேட்டால் முதலில் நாம் சொல்வது கணிதம் தான்.தேர்வு சமயங்களில் அம்மாவிடம்,"இந்தமுறை 100/100 தான்" என சூளுரைத்து சூத்திரங்களை நம் நினைவை விட்டு நீங்காமல் இருக்க "மாரியம்மா காப்பாத்து" என விபூதியை வெற்றித் திலகமாய் நெற்றியில் இட்டு பரீட்சைக்குச் செல்வோம்.ஆனால் கையில் பேனாவைப் பிடித்த மறுகணத்தில் சூத்திரங்கள் மறக்க ,"மாரியம்மா ஏம்மா இப்படி பண்றீயேமா?" என புலம்பியிருப்போம்.
ஆனால் ஒருவரையோ, தன் வாழ்நாள் முழுவதும் தினமும் கண்டுபிடிக்க முடியாத சூத்திரங்களுக்கும் விடையளித்து அவரை பெரியாள் ஆக்கியிருக்கிறார் "நாமக்கல்" எனும் பெண் தெய்வம் .அவரே பார்புகழும் கணித வல்லுநர் இராமானுஜம்.அம்மேதை கூறுகையில்,
 "என் கனவில் இரத்தம் வழியும் ஒரு திரையில், திடீரென்று ஒரு கை சூத்திரங்களுக்கு விடை எழுதும்; அதை நான் கவனமாய்க் கொள்வேன்".
     என்று கூறிய அவரே "Infinity" என்று சொல்லப்படும் முடிவில்லா எண்ணிற்கான மதிப்பைக் கண்டறிந்தவர்.அவர் படித்து வாங்கிய பட்டமோ "இளங்கலை கணிதம்"...ஆனால் அறிஞர் பெருமக்கள் தந்த பட்டமோ "கணிதமேதை".

   கனவுகள் ஒரு சாதாரண மனிதனை இந்த அளவு பார்புகழச் செய்யுமோ??!! நம் அறிவுக்கும் அப்பாற்பட்ட கனவுகளால் சிகரம் தொட்டவர்களை நினைக்கும்போது சற்றே உடல் சிலிர்க்கிறது...
                   -கனவுகள் மலரும்...

No comments:

Post a Comment

தலையங்கம்

#309 #வினோதினி #மார்பகப் புற்றுநோய் மார்பகப் புற்றுநோய் எப்பொழுதும்போல் அவசர அவசரமாக கிளம்பி 7.30 மணிக்கெல்லாம் அறுவை சிகிச்சைத் துறைய...