Sunday, 12 August 2018

#தொடர்கதை

#மரணம் உனதல்ல
#தமிழ் கீதன்
#3

காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் , "ஏகா ! ஏற்கனவே லேட்டா ஆயிடுச்சு .இட்ஸ் ஓகே பட் இறந்து போன துரைராஜ் பத்தின மொத்த Detail உம் எனக்கு இப்ப உடனே வேணும் " என  தெரிவித்தான் ஆதி.
   ஏகா அங்குஇருக்கும் A2 காவல் நிலையத்தில் உள்ள ஆய்வாளருக்கு தகவல் அறிவித்தார். அவரும் உடன் சென்று துரைராஜ் பற்றி தகவல்கலை சேகரித்தார்.
பல மணிநேர விசாரணைக்கு பின் தகவல்களை திரட்டி கொண்டு அழுவலகம் வந்தடைந்தர் ஏகாம்பரம்.
 SIR " விசரிச்சா வகைல அவருக்கு நிறைய குட்டி குட்டி பிரச்னைல நிறைய எதிரி இருந்து இருக்காங்க.பட் இவங்க கிராமத்துலேய உள்ள வீரகுமாருக்கு இவருக்கும் பல நாள் பகை இருந்துஇருக்கு.இது முக்க வாசி பேர் கொடுத்த ஸ்டேட்மென்ட  அதுமட்டும் இல்லாம அவரோட சின்ன வயசுல நிறைய பொண்ணுங்க் மேட்டர் ல கூட involve ஆயிருக்காரு பட் இப்போ எதுவும் அந்த மாதிரி இல்லனு எல்லாரும் conform சொல்றாங்க .அரண்மனை மாதிரி அவருக்கு வீடு .அவருக்கு யாரும் கிடையாது.வேலைக்கு சமயகாரர் ,தோட்டத்துகாரர், security ஆட்கள் இருந்து இருக்காங்க.கொஞ்ச நாளாவே அவருக்கு அதிகமா phone பேசிட்டு இருந்து இருக்காரு .அவர் இளம் வயசுல யூஸ் பண்றதுக்கு அவருக்கு தனியா அந்த gym அ வச்சுருக்காரு இப்பயும் அப்பப்போ யூஸ் பண்றதா செய்தி .இவ்ளோ தன் Sir எங்களால் திரட்ட முடிந்தது".
  " Very good  ஏகாம்பரம் ! ம்ம்ம் ....நீங்க சொல்றதலாம் வச்சி பாக்கும் போது வீரகுமர நம்ம first சஸ்பெக்ட ஆ வைக்கணும் னு நினைக்குறேன் .வாங்க late பண்ணாம வீரகுமரர் வீட்டுக்கு போலாம் " துரிதப்படுத்தினான்.
  காவல் துறை வாகனம் வீரகுமரர் வீட்டை வந்த அடைந்தது. வீரகுமரர் , துரைராஜ் கட்சியை சேர்ந்தவர் .இவருக்கும் சீட்டு கிடைப்பதில்  பல தடவை சிக்கல்களும் சண்டைகளும் ஏற்பட்டுள்ளன.
Excuse me mister வீரகுமரர் ,மிஸ்டர் துரைராஜ் சம்பந்தமா உங்கள கொஞ்சம் விசரிக்கணும்".
என்ன S.P , ஆளும்கட்சி வீடு னு தெரியாம நுழைஞ்சுட்டாய " அதட்டடலும் எகதாலமும் கலந்த குரலில் உறுமினான்.
" நீங்களே co operate பண்ணா நல்லா இருக்கும் இல்லனா ஸ்டேஷன் கூட்டிட்டு போய் விசாரிக்க வேண்டி இருக்கும் .எப்படி வசதி...
   கொஞ்சம் வியர்த்தவனாய் இந்த மிராட்டலுக்குக்கெல்லாம் பயந்தவனல்ல ஆதி என்பதை உணர்ந்தார், வீரகுமார் " சரி , சொல்லுங்க உங்களுக்கு அவன் murder விஷயமா என்ன என்ன கேட்கணும்.
  " உங்களுக்கு துரைராஜ்க்கும் உள்ள சண்டையை பத்தி சொல்லுங்க 
" அவனுக்கும் எனக்கும் ஒவ்வொரு தடவையும் கட்சியில் சீட் கொடுக்கும் போது சண்டை வரும் .இது எங்க கட்சி பயலுங்க பூரா பேருக்கும்தெரிஞ்சதுதான் .போன தடவையாவது எலெக்க்ஷனுக்கு சீட்டு  தர்றப்போ  கூட  அவன்  என்ன கொல்ல ட்ரை பண்ணான் அப்போலாம்  வந்து உங்கள்ட  கம்பளைன்ட்  கொடுத்தேன்  . அப்போ  ஒருபய கண்டுக்கல.  இப்போ எம்.எல்.ஏ எலெக்ஷன் வேற வர போகுது கட்சில எங்க ரெண்டு பேர்ல ஒருத்தருக்கு தான் சீட்டுக் கொடுக்கணும்னு முடிவு பண்ணிருந்தங்க இப்போ அவன் இல்ல டேரக்டா எனக்கு சீட் கிடைக்கிற நேரத்துல இப்படி பண்றிங்களே எஸ்.பி என்று பயத்தை வெளிக்காட்டதா அப்பாவியாய்  பேசினார்.


" சரி அப்போ நீங்க அந்த கொலைய பண்ணல . இட்ஸ் ஓகே . பட்  எனிடைம் எப்போ ஸ்டேஷன் கூப்பிட்டாலும் உடனே வரணும் " என்று அதட்டிவிட்டு ஆதி வெளியேறினான் .
எதுக்கும் வீரகுமார் வீட்டுக்கு வாசல்ல நம்ம ஆட்கள மஃப்டி ல போடுங்க . கீப் ஆன் வாட்சிங் ஹிம் . அண்ட் அல்சோ ட்ராக் ஹிஸ் கால்ஸ் " என்று ஏகாவிடம் கூறினான் . ஏகாவும் அவ்வாறே செய்தார் 
 
ஆதியும் ஏகாவும் வெளியேறியதை உறுதி செய்த பிறகு முற்றிலும்  வியர்த்தவராய்  வீரகுமார் ஒருவரை அலைபேசியில் தொடர்புகொண்டார் 

" ஹே ! எனக்கு துரைராஜ் வீட்ல நா  வந்துட்டு போன சி சிடிவி  ஃபுட்டேஜ் வீடியோ எனக்கு வேணும் . அத உடனடியா டெலிட் பண்ணனும் "
 
மறுமுனையில் ," வேணா சாமி ! ஏற்கனவே  போலீஸ் எங்க எல்லாரையும் விசாரிச்சுக்கிட்டு போயிட்டுருக்கு.இதுல மறுபடியும் இதெல்லாம் முடியாது தயவுசெய்து என்ன விட்டுடுங்க  
" என்ன  வேலு ! பயம் போய்டுச்சா ! குழந்தை குடும்பம் ல நியாபகம் இருக்குல்ல 

" ஐய்யா ! என்ன இப்படிலாம் சொல்றிங்க . அப்படி எதுவும் பண்ணிடத்திங்க . நீங்க சொல்றபடி செய்றேன் .  எனக்கு அந்த சிசிடிவி கன்றாவி எல்லாம் ஒன்னும் தெரியாதே . அத எப்படி நா எடுப்பேன் ".

"அதுக்கு நா ஒரு பையன அனுப்பி வைக்கிறேன் . நீ அவன உள்ள மட்டும் கூட்டிட்டு போ நா எப்போ வரணும் கிறத அப்புறம் உனக்கு சொல்றன் " என போனை துண்டித்தார் .

ஆதியின் உத்திரவு படி அவரை ஓட்டுக்கேட்டுக் கொண்டிருந்த ஆய்வாளர்கள் ஆதிக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர் 

ஆதியின் மனதில் மகிழ்ச்சி பிறந்தது ஏதோ ஒன்றை  சாதித்தது போல் எண்ணி மகிழ்ந்தான் 

இட்ஸ் ஆல்ரெடி டைம் நவ் 

நாளைக்கு மார்னிங்  டி. ஐ.ஜீ.ட உடனே இன்ஃபார்ம் பண்ணிட்டு
அவனை நாளைக்கு மார்னிங் அரேஸ்ட் பன்னி ஆகணும் .மகிழ்ச்சியால்  பரபரப்பானான் ஆதி . அன்றும் காவல் நிலையத்துலேயே உறங்கினான் காலை 7 மணி அலைபேசி அழைப்பு வந்தது .அழைப்பின் செய்தியை கேட்டு அதிர்ந்து போய் இருக்கையில் அமர்ந்தான் ஆதி......

        மரணம் உனதல்ல.....            
  தொடரும்.....
 

No comments:

Post a Comment

தலையங்கம்

#309 #வினோதினி #மார்பகப் புற்றுநோய் மார்பகப் புற்றுநோய் எப்பொழுதும்போல் அவசர அவசரமாக கிளம்பி 7.30 மணிக்கெல்லாம் அறுவை சிகிச்சைத் துறைய...