Monday, 9 July 2018

#கட்டுரைகள்

                        அனாதைகள்
                  சமுகப் பிரச்சனைகள் மக்களின் சமுக கண்ணோட்டங்களை பலவாறக
விழிப்படையச் செய்துள்ளன பல்லாண்டு காலங்கள் தொட்டு இன்று வரை மனிதம்  தம்மைச் சீர்ப்படுத்தி வந்துள்ளது.இருந்தும்  பலவாறான நிகழ்வுகளில் தாமே  இழிவுசெய்தும் இன்புறுகிறது.விதியின் சதியால் சமுகத்தில் துட்சமாக தூக்கி  எறியப்பட்ட 
அன்பை நாடும் நெஞ்சங்களின் வண்ணங்களுக்காக. ஒரு சில வரிகள் இதோ....!

துவக்கம்:உலக நாகரீகங்கள் துவங்கிய காலம் தொட்டே இந்நிகழ்வு கண்ணெதிரே 
அரங்கேறி தான் வந்துள்ளது.பெற்றோருடன் வாழ இயலாமல் வாழ்க்கை ஓட்டத்தில் 
பிரிந்து துன்புற்று வாழும்(நிலை தடுமாறி) நிலையில் ஒருவன் அனாதை  ஆகின்றான்.
இந்நிலையை வாழ்க்கை தரும் பாடமென எண்ணி உயர்வோர் சிலர்,இப்பேரலையில்
தொலைந்தோரே! பலர்.

கண்ணெதிரே:இரண்டாம் உலக யுத்தத்தின் போதும்;உயிர்க்கொல்லி நோய்களின்
போதும்;எதிர்பாரா விபத்துகளின் போதும்;கொலைகார குணம் கொண்ட வெறி
கொண்ட மிருகங்களாலும் கண்ணெதிரே கண்ணீராய்,நிலை குலைந்த ,வாழ்வை
இழந்த நெஞ்சங்கள் ஏராளம்.தனி மனித வெறியால்,இரண்டாம் உலக யுத்தத்தின்
போது ஜெர்மனி,இத்தாலி.,ஜப்பான்  முதலிய தேசங்கள் அனாதைகளின்,
கண்ணீரால் நனைந்ததை யாரும்  இன்றளவும் மறவீர்!

வைரங்கள்:இயற்கையால் புறக்கணிக்கப்பட்டோருக்கு மனவலிமையே
துணை. துன்பம் துறத்தினாலும் உலகையே தன் பக்கம் சில காலம் திரும்பி
பார்க்க வைத்த உலகத்தின் பெறும் தத்துவதத்துவஞானிகளான நெல்சன் மண்டேலாஆண்ட்ரு ஜாக்சன்,மோசஸ் மற்றும் பலரும் கடந்து பாதைகள்  நம் 
வாழ்க்கையின் தேடல்கள்.

நேசக்கரங்கள்:மதம் பிடிக்காத மதம் படித்த யாவரும், குறைகளைக் கண்டு
எவரையும் ஒதுக்கியது கிடையாது.மதங்களும் இலக்கியங்களும் கூட
இதையே போதித்து வருகிறது.திருக்குரான்,பைபிள் முதலிய சமய
இலக்கியங்களில் உள்ள வசனங்கள் கூட இவற்றிற்கு சான்று.
அவற்றுள் சில,அனாதை மற்றும் விதவைகள்  அடிமை கொள்ள
எவருக்கும் உரிமையில்லை-குரான்;ஆதரவற்றோரின் அடைக்களம் நானே!-பைபிள்.

மாற்றம் தேவை:இன்று உலகம்  முழுவதும்13,000,000 பேரும்,இந்தியாவில் 6500 பேரும் 
6.5%  மக்களும் நம்மிடையே வாழ்ந்து வருகின்றனர்.லியோ டால்ஸ்டாய்,சின்ட்ரல்லா
,மரர்லின்  மன்ரோ நாமறிந்த மகத்தான மனிதர்கள்,இவர்களல்லலாது இன்னும் 
வாய்ப்புகள் கிடைக்காத,உள்ளங்கள் நம்மிடையே உள்ளனர்.அவர்களுக்காக
உதவ மனம் கொள்வோம்.உதவும் வலிமை இருந்தும் உதவாமல்
இருப்பதும் குற்றமே..!உணர்வு கொள்வோம் உந்துதளய் 
இருக்க முயல்வோம்...!
                                                                        

No comments:

Post a Comment

தலையங்கம்

#309 #வினோதினி #மார்பகப் புற்றுநோய் மார்பகப் புற்றுநோய் எப்பொழுதும்போல் அவசர அவசரமாக கிளம்பி 7.30 மணிக்கெல்லாம் அறுவை சிகிச்சைத் துறைய...